×

மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு: கடலோர காவல்படை நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான சைபர் படகில் கடந்த 21ம் தேதி அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், மாதவன், காசி, முருகன், வேல்முருகன் உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

கோடியக்கரை கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 6 பேர் மீது இரும்பு பைப் - களை கொண்டு இலங்கை கடற்படை கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் பாலமுருகன், அருண்குமார், மாதவன், காசி, முருகன், வேல்முருகன் காயமடைந்தனர். காயமடைந்த மீனவர்கள்  5 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 451, 395, 397 போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களிடம் வழிப்பறி செய்தது, அத்துமீறி தாக்கியது, கொலை முயற்சி, இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Lankan navy ,Mayiladuthurai ,Coast Guard , Mayiladuthurai fishermen, attack, Sri Lanka Navy, case
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...