சென்னை : இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி இன்றே தேர்தல் ஆணையத்தை நாடுகிறது அதிமுக. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்.