கோவை: பேரூரில் தஞ்சமடைந்துள்ள மக்னா காட்டு யானை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மருத்துவர் மனோகரன், சதாசிவம், சுகுமார், பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு யானைக்கு மயக்க மருந்து செலுத்தினர். டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக நுழைந்த யானை, கோவை பேரூரில் தஞ்சமடைந்தது.