சென்னை: பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் அவர் கூறினார். தீர்மானங்கள் செல்லுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது சிவில் நீதிமன்றம் தான் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.