×

ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபட்டேன். அற்புதமான செய்தி வந்தது : எடப்பாடி பழனிசாமி பேச்சு

மதுரை : ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபட்டேன். அற்புதமான செய்தி வந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது கிடைக்கும் வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோவிலுக்கு சென்று மாலை அணிவித்து வழிபட்டேன். இரு தலைவர்களின் அருளால் அடுத்த சில நிமிடங்களிலேயே  அற்புதமான செய்தி வந்தது. அதிமுக மூன்றாக போய்விட்டது. நான்காக போய்விட்டது என்றார்கள். ஆனால் இனி ஒன்றே ஒன்று தான்.அதிமுக 4 ஆக உடைந்தது என்ற கருத்துகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவு காட்டியுள்ளது.1.5 கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது.அதிமுகவை முடக்க நினைத்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது.ஏழை, சாமானியர்கள் நலனுக்காகவே தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. வலிமையான கட்சி அதிமுக. அதன் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது,என்றார்.


Tags : Jayalalithah ,Edabadi Palanisamy , Jayalalitha, Edappadi, Palaniswami
× RELATED தாம்பரத்தில் அதிமுக சார்பில் வரும் 5ம்...