×

அரசியலில் ஓபிஎஸ்-ன் எதிர்காலம் ZERO தான் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

சென்னை: கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில்  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, மகிழ்ச்சியான தீர்ப்பு. அரசியலில் ஓ பன்னீர் செல்வத்தின் எதிர்காலம் பூஜ்யமாக இருக்கும்.ஓபிஎஸ் சசிகலா, டிடிவியை தவிர மற்றவர்கள் யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம். பன்னீர் செல்வம் நியமித்த நிர்வாகிகள் பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொள்வார்கள்.அதிமுகவுக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தீர்ப்பு மூலம் உறுதியாகி உள்ளது,என்று கூறினார். 


Tags : minister ,jayakkumar ,former minister , Politics, OPS, ZERO, ADMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...