×

எடப்பாடி வசமானது அதிமுக... பழனிசாமியின் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில்,கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். அங்கு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.



Tags : Paul ,Palanisamy , Edappadi, ADMK, Palaniswami, Paul Abhishekam
× RELATED சென்னையில் பிரதமர் மோடி, அண்ணாமலை...