×

இந்தோனேஷியா கோயில் குளத்தில் நீராடிய அமலா பால்

ஜகார்த்தா: இந்தோனேஷியா கோயில் குளத்தில் புனித நீராடினார் அமலா பால்.இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால், மதுக்கு அடிமையானார். திடீரென பஞ்சாப் பாடகர் ஒருவருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்நிலையில் தற்போது பாடகருடன் காதல் முறிவு ஏற்பட்டு, அவர் மனம் உடைந்து போயுள்ளார். இதனால் தனது பாதையை ஆன்மிகம் பக்கம் திருப்பி இருக்கிறார்.  பழனி கோயிலுக்கு சென்று வந்தவர், தற்போது பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். தியானத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் உள்ள சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். அங்குள்ள குளத்தில் புனித நீராடினார். இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் அமலா பால் கூறும்போது, ‘மன அமைதிக்காக கோயில்களுக்கு செல்கிறேன். அதில், எனக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது. மகிழ்ச்சி ஏற்படுகிறது. மன உளைச்சலில் இருந்து வெளியே வருகிறேன்’ என்றார்.



Tags : Amala Pal ,Indonesia , Indonesia, Temple, Bathing, Amala Bal
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்