மும்பை: நிர்வாக ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி அன்ட் கோ 2,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆள்குறைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து வந்த நிறுவனமே தன் பணியாளர்களை குறைக்க உள்ளது. மெக்கின்சியில் பணிபுரியும் 45,000 பேரில் வாடிக்கையாளர், நிறுவனங்களுடன் தொடர்பில் இல்லாத ஊழியர்கள் சிலரை நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.