×

தீவிரவாதிகளுடன் தொடர்பா? 8 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: தீவிரவாதிகள், சமூகவிரோத கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்  இடையே உள்ள தொடர்பு குறித்த வழக்குகள் தொடர்பாக 8 மாநிலங்களில் 76 இடங்களில் நேற்று தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ குழுவினர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது ரூ.1.5 கோடி பணம், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது  பாகிஸ்தானில் இருக்கும் ஹர்விந்தர் சிங் சந்து என்கிற ரிண்டாவை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தீவிரவாதியாக அறிவித்த சில நாட்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : NIA , Connection with terrorists? NIA check in 8 states
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...