×

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமாநில வாலிபர்களிடம் செல்போன், பணம் பறிப்பு: 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உமேஷ் (21), உஸ்மான் (28), அஸ்மான் (30). இவர்கள், 3 பேரும், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், 3 பேரும் நேற்று முன்தினம் வேலை முடிந்து நாவலூர் கிராமத்தில் வசித்து வரும் நண்பர்களை சந்திக்க ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றுள்ளனர். அப்போது, போந்தூர் பகுதியில் சென்றபோது அங்கு நின்றிருந்த வாலிபர்கள், வடமாநில வாலிபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், ரூ.2,700 பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வடமாநில வாலிபர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை  சேர்ந்த பார்த்தசாரதி (25), செல்வகுமார் (28), சங்கீத்குமார் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், 3 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags : North State ,Sriperumbudur , Extortion of cell phones, money from North State youths near Sriperumbudur: 3 arrested
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...