×

வெளிநாடு தப்பிய பொருளாதார குற்ற தடுப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க டிஜிபி உத்தரவு

சென்னை: வெளிநாடு தப்பிய பொருளாதார குற்ற தடுப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க டிஜிபி உத்தரவு அளித்துள்ளார். ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிறுவனங்களின் மோசடி வழக்கு பற்றி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவும் இந்தியாவில் தலைமறைவாக உள்ள நிதிநிறுவன மோசடி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கவும் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : DGP , DGP orders to issue red corner notices to economic crime prevention case convicts who have absconded abroad
× RELATED வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம்...