சென்னை: ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி நேரு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹிஜாவு நிறுவனத்தின் தலைவர் சவுந்திரராஜன் நீதிமன்றத்தில் நேற்று மரணமடைந்த நிலையில் நிர்வாகி நேரு தற்கொலை செய்துகொண்டார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தல் மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வட்டி தருவதாக கூறி ரூ.800 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர்.