×

பெரம்பலூரில் பயங்கரம்: மதுக்கடை அருகில் வாலிபர் எரித்து கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று காலை ஆண் சடலம் முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடத்தில் தீ வைத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

இதனால் மர்ம நபர்கள் வேறு எங்கோ வைத்து அவரை எரித்துவிட்டு இங்கு கொண்டு வந்து வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வழக்கு பதிந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை எரித்து கொன்றது யார், எதற்காக கொலை நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபர் யாரும் மாயமானதாக புகார் வந்ததா என அனைத்து காவல் நிலையங்களிலும்  விசாரித்து வருகின்றனர்.


Tags : Perambalur ,Valiber ,Barkava , Panic in Perambalur: Youth burnt to death near liquor shop
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி