நாகர்கோவில்: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இந்து சமய மாநாடு நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறை, ஐந்தவ சேவா சங்கம் இணைந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி விழா, மாநாடு நடத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.