×

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் வீரர்கள்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மரவப்பட்டியில் நூற்றாண்டு பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 450 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் தங்களின் தீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் மற்றும் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும் தென்னங்கன்று ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர்.


Tags : Jallikattu ,Dindigul , Dindigul, jallikattu competition, bull, players
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை