×

மனிதரின் சிந்தனையை தீர்மானிப்பது அவரது தாய்மொழியே.. கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை : உலக தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்கு சமம் ஆவான். தமிழர்களாகிய நாம் #தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம்!. தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம். மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியவாறு தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்கவும், கட்டாய பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ் வாழ்க!,என்றார்.


Tags : Kamal Haasan ,Anbumani Ramadoss , Kamal Haasan, Anbumani, Ramadoss
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...