டெல்லி: உரிமை மீறல் தொடர்பாக 12 எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கார் பரிந்துரை செய்துள்ளார். 12 எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் பற்றி விசாரிக்கும் குழுவுக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார். மாநிலங்களவையில் பட்ஜெட் தொடரின்போது 12 எம்.பிக்களும் அமளியில் ஈடுப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.