துருக்கி: துருக்கி, சிரியா எல்லைப் பகுதியில் நேற்று (பிப்.20) மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழப்பு, 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏற்கனவே பிப்.6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000-ஐ கடந்தது. அதன் மீட்பு பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில், மீண்டும் சோகம்.