×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைக் கைதி சாவு: போலீசார் விசாரணை

புழல்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு கைதி ஒருவர் பரிதாபமாக பலியானார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (62). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூந்தமல்லியில் இயங்கி வரும் தேசிய பாதுகாப்பு முகமை போலீசாரால் ஒரு கொலைவழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை பூந்தமல்லி சிறப்பு கிளை சிறையில் விசாரித்து வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அவர் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சர்புதீன், கடந்த 15ம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அன்றிரவு சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு  சர்புதீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



Tags : Stanley Government Hospital , Prisoner dies at Stanley Government Hospital: Police probe
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு