×

சென்னை - மங்களூரூ விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ஆவடியில் நின்று செல்லும்

சென்னை:  சென்னை சென்ட்ரல் மங்களூரூ விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ஆவடியில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயில் (12685) மற்றும் மறு மார்க்கமாக மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் (12686), கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு ஆவடி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. மேலும் இந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Chennai ,-Mangalore ,Express ,Avadi , The Chennai-Mangalore Express will halt at Avadi until further notice
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்