×

மார்ச் மாதம் ஒரு விடியல் நிகழுமா? ஓபிஎஸ் நாக் அவுட்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் மாதம் விடியல் நிகழுமென ஓபிஎஸ் கூறியிருக்கிறார். எங்களை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் ‘நாக் அவுட்’ ஆகிவிட்டார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகவும், நூதன முறையில் பணப்பட்டுவாடா வாக்காளர்களுக்கு செய்யப்படுவதாகவும் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபு உடனிருந்தார்.

பின்னர், நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கவனம் செலுத்தி, முறையாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் ஒரு தனி அதிகாரியை நியமித்து மேற்பார்வை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார். மார்ச் மாதம் ஒரு விடியல் நிகழுமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

ஓபிஎஸ் இப்போது கூடுவார் கூட சேர்ந்துள்ளதால் அந்த காத்து தான் அடிக்கும். எங்களை பொறுத்தவரை ஓபிஎஸ் ஆட்டக்களத்திலேயே இல்லை. அவர் ‘நாக் அவுட்’ ஆகிவிட்டார். எனவே ஓபிஎஸ் பற்றி பேசவேண்டாம். தேர்தல் களத்தில் அதிமுகவை பொறுத்தவரையில் பணநாயகத்தை விட ஜனநாயகத்தை நம்புகிறோம். எங்களுக்கு பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், எங்களின் சாதனைகள் மீது நம்பிக்கை உண்டு. ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜ தலைவர் அண்ணாமலை தோழமை கட்சி என்ற அடிப்படையில் பிரசாரம் செய்துள்ளார். அண்மையில் எடப்பாடி பழனிசாமி மீசை வைத்தவர்கள் எல்லாம் ஆண்களா என்று பேசியது என்பது, அடைத்து வைத்துள்ளவர்களை திறந்துவிடுங்கள் என்று சவால் விட்டுச் சொல்லக்கூடிய விஷயம் அது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayakumar , Will there be a dawn in March? OPS Knockout: Jayakumar Interview
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...