×

காதல், திருமணத்தை ஏற்க மறுத்ததால் சிறுமியின் மீது ஆசிட் வீச்சு: கர்நாடகாவில் மெக்கானிக் கைது

ராமநகரா: காதல், திருமணத்தை ஏற்க மறுத்ததால் சிறுமியின் மீது ஆசிட் வீசிய பைக் மெக்கானிக்கை கர்நாடகா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் ராமநகரா மாவட்டம் கனகபுராவின் குருபேட்டைச் சேர்ந்த சுமந்த் (21) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால், அந்த சிறுமியின் மீது சுமந்த் ஆசிட் வீசினார். தீக்காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ராமநகர காவல் போலீஸ் எஸ்பி கார்த்திக் ரெட்டி கூறுகையில்,  ‘மெக்கானிக் தொழில் செய்து வரும் சுமந்த், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள அவரை கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த சிறுமி மறுப்பு தெரிவித்தார். அதனால் ஆவேசமடைந்த சுமந்த், சிறுமியின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார். சிறுமியின் முகம் மற்றும் கண்களிலும் ஆசிட்டால் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சுமந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்துள்ளோம்’ என்றார்.

Tags : Karnataka , Acid thrown on girl for refusing love, marriage: Mechanic arrested in Karnataka
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...