சென்னை: அனுமதியின்றி வீட்டில் கிளி வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கிளிகளை வளர்த்ததாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் அவற்றை எடுத்து சென்றனர். யூடியூபில் பதிவிட்ட வீடியோவில் கிளிகள் தொடர்பாக தகவல் வெளியானதால் இது குறித்து வனத்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.