×

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்: ஓபிஎஸ் தரப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என ஓபிஎஸ் தரப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்தில், தீர்மானங்களை வைத்திலிங்கம் வாசித்தார். அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தன்னலவாதிகளின் கையில் சிக்கி சின்னா பின்னமாகிவிடக்கூடாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டர்களால் 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய பிளவை சர்வாதிகார கும்பல் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அவைத் தலைவர் நடந்துகொண்டதாக பன்னீர்தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்தது.

இடைத்தேர்தல்: இரட்டை இலை வெற்றி பெறாது என கருத்து


ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறாது என்ற நிலை உள்ளதாக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர்:

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என ஓபிஎஸ் தரப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை விரைந்து நியமிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுகவின் பொன்விழா ஆகிய முப்பெரும் விழாவை மார்ச் மாதம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Jayalalithi ,Permanent Secretary General ,Mokukhu ,OPS , AIADMK, General Secretary, Jayalalithaa, resolution
× RELATED நிரந்தர பொதுச்செயலாளர் விவகாரம்...