×

கஜானாவை காலியாக்கிய அதிமுக அவதூறு பரப்புவதா?..துரை வைகோ பாய்ச்சல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது: கடந்த 20 மாதங்களுக்கு முன் திமுக ஆட்சிக்கு வந்தபோது கொரோனா 2ம் கட்ட பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு  நெருக்கடிகளை சந்தித்தது. முந்தைய ஆட்சியில் இருந்த அதிமுகவினரால் அரசு கஜானா  காலியாக்கப்பட்டு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது. ஆனால்,  முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து சவால்களையும் சந்தித்து  வெற்றி கண்டு இன்று சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.

தொழில்கள் எல்லாம் முடங்கி இருந்த நிலையை மாற்றி, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து ரூ.2.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். 3.5 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் நிலையையே மாற்றியுள்ளார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அதிமுகவும், பாஜவும் திமுக அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றார்.


Tags : AIADMK ,Durai Vaiko , Is the AIADMK spreading slander that emptied the treasury?..Durai Vaiko jump
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...