×

பனி மூட்டம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் நிகழ்ச்சி திடீர் ரத்து: டெல்லி புறப்பட்டு சென்றார்

குன்னூர்: கோவை  ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகா சிவராத்திரி விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்,  கோவை சுற்றுலா  மாளிகையில் தங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர்  வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை அதிகாரிகளுடன்  கலந்துரையாடல் மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவு தூணில் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று  காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புறப்பட இருந்தார்.

இந்நிலையில், குன்னூர் பகுதியில் நிலவிய  திடீர் பனி மூட்டம் காரணமாக கோவையிலிருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டர் பறக்க  இயலாது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவின்  குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடந்து அவர், நேற்று மதியம் 12.15 மணிக்கு சூலூரில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி  புறப்பட்டு சென்றார்.

Tags : President ,Dravupati Murmu Coonoor ,Delhi , Sudden cancellation of President Drabupati Murmu Coonoor program due to fog: Left for Delhi
× RELATED தேர்தல் அறிக்கையில் வார்த்தை ஜால...