சென்னை: உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த ‘தமிழ்த்தாத்தா’ டாக்டர் உ.வே.சா அவர்களின் பிறந்தநாள். நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.