×

தீரன் சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் இன்று (18.02.2023) சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான் அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள்ள இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் முன்னிலையில் பார்வையிட்டார்கள்.

மாவீரர் பொல்லான் வாழ்க்கை வரலாறு என்பது, நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாக உள்ளார். மூன்று பெரிய போர்களிலே தீரன் சின்னமலையோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம், அவர்களுடைய படை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது, என்னென்ன திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் எப்படியோ அறிந்து தான் தீரன் சின்னமலை இடத்திலே அதை தெரிவித்து, அவர்களுடன் இணைந்து, அந்த வெற்றியை பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் மாவீரர் பொல்லான் அவர்கள் ஆவர்.

மேலும், மாவீரர் பொல்லான் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய சந்ததியினர் அறிந்திடும் வகையில் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட, வடுகப்பட்டி இ கிராமம், ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு பூமிதான வாரியம், சென்னைக்கு சொந்தமான சுமார் 0.16.6 ஹெக்டேர் (41.00) சென்ட் பரப்பளவில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான இடம் புலத்தணிக்கை மேற்கொண்டு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயராமபுரத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், அறச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Kavirar Pollon ,Deeran Chinnamalayas ,P. Saminathan , Theeran Chinnamalai, Maveeran Pollan statue, Minister M. P. Saminathan
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...