புதுக்கோட்டை: வேங்கையவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். புதுக்கோட்டை ஆட்சியர் மாவட்ட எஸ்.பி.15 நாளில் அறிக்கை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. அம்பேதகர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகுமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.