×

மாஜி மனைவி, தந்தை உட்பட 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் கைது: அமெரிக்காவில் பரபரப்பு

அர்கபுட்லா: அமெரிக்காவில் முன்னாள் மனைவி, வளர்ப்பு தந்தை உட்பட 6 பேரை அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டேட் கவுன்டியில் உள்ள அர்கபுட்லாவில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி 52 வயதான ரிச்சர்ட் டேல் குரும் என்பவர் தனிநபராக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளார். இவர் தனது முன்னாள் மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார். அடுத்ததாக, வளர்ப்பு தந்தை மற்றும் அவரது சகோதரியையும் அவர்களது வீட்டிற்குள் சென்று சுட்டுக் கொன்றுள்ளார்.

மேலும், அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேரையும், லாரி டிரைவர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார். தகவலறிந்த போலீசார் ரிச்சர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அர்கபுட்லா பகுதியில் வசிக்கும் மொத்த மக்கள் தொகை வெறும் 280 மட்டுமே. இதுவரை பெரிய அளவில் எந்த குற்ற சம்பவங்களும் நடக்காத இப்பகுதியில் 6 பேரை ஒருவர் துப்பாக்கியால் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : America , The man who shot and killed 6 people, including his ex-wife and father, was arrested: sensation in America
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...