கராச்சி: கராச்சி காவல் நிலையத்திற்குள் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் ஏகே47 துப்பாக்கியுடன் மனித வெடிகுண்டுகளாக புகுந்து நடத்திய பயங்கர தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் உள்ள காவல் நிலைய கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 7.10 மணி அளவில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகள் 3 பேர் மனித வெடிகுண்டுகளாக புகுந்தனர். காரில் வந்த அவர்கள் கையெறி குண்டுகளை வீசி காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். போலீசார் சுதாரிப்பதற்குள் காவல் நிலையத்தின் 4வது மாடிக்கு சென்ற தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.