×

'விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்': காஞ்சன் கட்டார் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தகவல் தெரிவித்தார். ஆசிரமப் பெண்களிடம் நடத்திய விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காஞ்சன் கட்டார் கூறினார்.


Tags : Kanchan Khattar , Villupuram Anbu Jyoti Ashram, Sexual Rape
× RELATED தமிழ்நாட்டின் நீலகிரி உள்ளிட்ட 12...