×

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின் ஒன்றிய நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும். ஒன்றிய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து நிலுவை தொகையை விடுவிக்க முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman , State, GST Dues, Nirmala Sitharaman
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின்...