திருவள்ளூர்: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஹெல்மெட் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட்டிற்கு பணம் கேட்டபோது ஹெல்மெட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. கஞ்சா போதையில் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த வடமாநிலத்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.