×

ரஞ்சி கோப்பை பைனல் சவுராஷ்டிரா வலுவான முன்னிலை

கொல்கத்தா: பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை பைனலில், சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச... பெங்கால் முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்டது (ஷாபாஸ் 69, அபிஷேக் 50). சவுராஷ்டிரா பந்துவீச்சில் உனத்கட், சகாரியா தலா 3, சிராக் ஜானி, தர்மேந்திரசிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது. ஹர்வித் தேசாய் 38, சகாரியா 2 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹர்விக் தேசாய் 50, சகாரியா 8 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன் 59 ரன் எடுத்து போரெல் பந்துவீச்சில் பிரமானிக் வசம் பிடிபட்டார். கேப்டன் அர்பித் வாசவதா - சிராக் ஜானி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த சவுராஷ்டிரா வலுவான முன்னிலை நோக்கி முன்னேறியது. 2ம் நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்துள்ளது. வாசவதா 81 ரன், சிராக் ஜானி 57 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Ranji Cup ,Saurashtra , Ranji Cup Final Saurashtra strong lead
× RELATED பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்