×

காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி டேங்க் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் வேலுசாமி(25). ஆன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் ரவிசங்கரி(22), டிப்ளமோ நர்சிங் படித்த இவர், சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். பேருந்தில் செல்லும்போது வேலுச்சாமிக்கும், ரவிசங்கரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய ரவிசங்கரி, வேலுசாமியுடன் சென்றார்.

இருவரும் நேற்று காலை திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளத்தில் உள்ள மலைக்கோயிலில் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோருக்கு பயந்த ரவிசங்கரி, தனது காதலனுடன் திருமணக்கோலத்தில், நேற்று மதியம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண் வீட்டாரை போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் வேலுசாமியுடன் ரவிசங்கரியை அனுப்பி வைத்தனர்.

Tags : The couple sheltered in the police station
× RELATED தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை...