திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லம நாயக்கன்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். புனித வனத்து அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. திண்டுக்கல், மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 500 மாடுகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.