×

பிரதமர் அலுவலக இயக்குநராக தமிழ்நாட்டு பெண் ஐஏஎஸ் நியமனம்

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் அலுவலக இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரி  லலிதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக இயக்குநராக  மேற்கு வங்க ஐஏஎஸ் அதிகாரியான லலிதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கொல்கத்தாவில் உள்ள தேசிய பேஷன் தொழில்நுட்ப மையத்தில் வளாக இயக்குனராக உள்ளார். வரும் 2027ம் ஆண்டு பிப். 28ம் தேதி வரை அவர் பிரதமர் அலுவலக இயக்குநர் பொறுப்பை  வகிப்பார் என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 43 வயதான லலிதாலட்சுமி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Prime Minister's Office , Director, Office of the Prime Minister, Tamil Nadu Female IAS, Appointed
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து