புதுடெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்கிறார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்று உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு களங்களில் உள்ளவர்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.