சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். யூகத்தின் அடிப்படையிலேயே சி.வி.சண்முகம் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார் என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.