கேப் டவுன் : தென்ஆப்பிரிக்கா நாட்டில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதியதில் சுற்றுலா பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லிம்போபோ மாகாணத்தின் வெம்பே நகரில் ஆற்றின் மேல் கட்டுப்பட்டுள்ள மேம்பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் கவச வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது. எதிர்திசையில் வந்த சுற்றுலா பேருந்துடன் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைதடுமாறிய பேருந்து பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்தது.