புதுச்சேரி: மழையினால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலத்தை ஆய்வு செய்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். காரைக்காலில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.