×

சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன காட்சி அரங்கை 29,400 பேர் பார்த்தனர்..!!

சென்னை: சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன காட்சி அரங்கை 29,400 பேர் பார்த்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு அரங்காக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் 47வது அகில இந்தியா சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தின் மாதிரி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அரங்கில் பொதுமக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனையும் நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக அரங்கத்தில் உள்ளே செல்லும் வழியானது மெட்ரோ ரயில் போன்ற அமைப்பிலும், வெளியே வரும் வழியானது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் குறித்த பல்வேறு புகைப்படங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைப்பு, மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-1 மற்றும் கட்டம்-2க்கான வரைப்படம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் குறித்தான தகவல்கள் மற்றும் செய்திகள் தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

 திருமயிலை மெட்ரோ ரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு வருகை தரும் பாா்வையாளா்கள் மத்தியில் பிரமிப்படைய செய்கிறது. பொதுமக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அரங்கில் பயண அட்டை விற்பனை செய்யப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரங்கில் இதுவரை 623 பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Metro ,Rail Enterprise ,Chennai Firefighter Tourism Festival , Chennai Archipelago, Tourism Exhibition, Metro Rail Corporation Exhibition Hall
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...