டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியம் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11.30 மணிக்கு தொடங்கி விடிய விடிய நீடித்த வருமான வரி சோதனை, 2வது நாளாக தொடர்கிறது என தெரியவந்துள்ளது.