ஐதராபாத்: மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது செயலால் நெகிழ வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் அல்லு அர்ஜுன். தற்போது விசாகப்பட்டினத்தில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்திப்பதை அல்லு அர்ஜுன் தவிர்ப்பது கிடையாது. புஷ்பா 2 படத்துக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் ஐதராபாத்தில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தார் அல்லு அர்ஜுன். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.