×

பட்டதாரி பெண்ணுக்கும் திருநம்பிக்கும் திருமணம்: பெரியார் படம் முன் மாலை மாற்றினர்

கோபி: காஞ்சிபுரம் மாவட்டம்  திருமுக்கூடலை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் பி.காம் பட்டதாரி அருணாதேவி. இவர்களின் உறவினர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளனர். அங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன், சென்றபோது, அழகாபுரி காந்திநகரை சேர்ந்த அருண் பாஷ் என்ற திருநம்பியுடன் காதல் மலர்ந்துள்ளது. அருண்பாஷ் எம்பிஏ படித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்ததும், பெற்றோர் ஏற்க மறுத்தனர். இதனால் இரு மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி கேரளா சென்றபோது கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள திருநங்கை ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தம்மம் பவுண்டேசன் நடத்தி வரும் திருநங்கை பிரியாவிடம் இவர்களை அனுப்பி வைத்தார். அருணாதேவியும், அருண்பாஷ்சும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தனர். இதைத்தொடர்ந்து தம்மம் பவுண்டேசன் நிறுவனரான திருநங்கை  பிரியா இருவரையும் கோபியில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்திற்கு அழைத்து வந்தார். அதைத்தொடர்ந்து இருவரும், தந்தை பெரியார் உருவ படம் முன் மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். காதலர் தினமான இன்று இருவருக்கும் திராவிடர் கழகத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.

Tags : Thirunambi ,Periyar , Graduation girl and Thirunambi married: Periyar changed the evening before the film
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...