×

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார் தாம்பரம் மேயர்

தாம்பரம்: தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை இன்று வழங்கினார். தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி சார்பில் மண்டலம்-5, சேலையூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடற்புழு நீக்க நாள் முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் இன்று (14.02.2023)  தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அல்பெண்டேசோல் மாத்திரைகளை வழங்கினார்.

தாம்பரம் மாநகராட்சியின் சார்பில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு இன்று பள்ளிகள், கல்லூரிகள், மற்றும்  ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 2 லட்சத்து 66 ஆயிரத்து 751  குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் இன்று (14.02.2023) வழங்கப்படது. இதில் 1 முதல் 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு பாதி அளவு (200 mg) மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை ஒரு அல்பெண்டேசோல் மாத்திரையும் (400 mg )  வழங்கப்படும். மேலும் விடுபட்ட நபர்களுக்கு 21.02.2023 அன்று குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது.

Tags : mayor ,Tambaram ,National Theme Removal Day , Mayor of Tambaram distributed deworming pills to school students on the occasion of National Deworming Day.
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...