சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மோதல் ஏற்பட்டது. விடுதியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தேவ சகாப், ஞானவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.