திருச்சி: திருச்சி அண்ணல்காந்தி அரசு மருத்துவமனையில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் அகற்றாமல் உள்ளதாக செய்தி வெளியான நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ கழிவுகளை வெட்டவெளியில் வைத்திருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.